வெள்ளி, 22 ஜூலை, 2011

மக்களுக்கு பயன் தராது



 காஞ்சிபுரம், ஜூலை 21: தமிழகத்தில் கல்வி மற்றும் மருத்துவம் தவிர வேறு எதுவும் இலவசமாக வழங்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
 காஞ்சிபுரம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
 தமிழ்நாட்டில் நடப்பது அரசியலே அல்ல, அரிசியல். ரூபாய்கு 3 படி அரிசி, ரூபாய்க்கு ஒரு படி அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இப்போது 20 கிலோ இலவச அரிசி என்று அரசியல் இப்போது அரிசியலாக மாறியுள்ளது.
 இலவச மிக்ஸி கிரைண்டர், டி.வி. கொடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
 கல்வியும், மருத்துவமும் தவிர வேறு எதையும் இலவசமாக கொடுக்கக்கூடாது. கல்வியை இலவசமாக கொடுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கினால், இலவசமாக கொடுக்கும் பொருள்களை அவர்களே வாங்கிக் கொள்வார்கள்.
 சங்க காலத்தில் தமிழர்கள் வீரத்துடன் போருக்கு சென்றனர். தற்போது தமிழர்கள் பாருக்கு செல்கின்றனர். கல்விக் கூடங்களை அரசு நடத்த வேண்டும். ஆனால் அது தனியாரிடம் விடப்படுகிறது.
 ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதனால்தான் போருக்கு சென்ற தமிழன் பாருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.நன்றி தினமணி 

இது போன்று அறிக்கைகளும் பேச்சுகளும் மக்களுக்கு பயன் தராது அது போன்ற போராட்ட உணர்வும் இந்த அரசியல் வாதிகளுக்கு கிடையாது நாங்கள் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக அப்ப அப்ப இது போன்ற வார்த்தைகலை அவிழ்த்து விடுவார்கள், ஏன் இவர்கள் கருணா நீதி யோடு கூட்டணி சேர்ந்து போட்டி இட்ட பொது அவரின் இலவச அறிவிப்புகள் இவர்கள் காதில் விழவில்லையோ? சுயநலத்தை விட்டுவிட்டு இவர்கள் எப்போது மக்களுக்காக போராடுவார்கள்? அந்த நிலை நம் அரசியல் வாதிகளிடம் ஏற்படுமா? எங்கே அதெல்லாம் அவர்கள் செய்திருந்தால் நாடு  எப்பவே முன்னேறி இருக்கும் நாமும் முன்னேறி இருப்போம் அட நீங்க வேறே இப்பவுள்ள அரசியல் வாதிகளுக்கு எப்படி ஊழல் செய்வது அதை எப்படி மறைத்து தப்பிப்பது என்று யோசிக்கவே நேரம் இல்லாதவர்கள் எங்கே மக்களை யோசிப்பார்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif