புதன், 24 ஆகஸ்ட், 2011

பேராசைக் குணத்தை மாற்ற வேண்டும்.



பேராசை பெரிய நஷ்டத்தை விளைவிக்கும் என்பார்கள். இதுகுறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.* மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை நிறைந்திருக்கின்றது (அவன் விரும்பியபடி) இரு ஓடைகள் நிறைய பொருள் கிடைத்தாலும் (அத்துடன் திருப்தியடையாது) மூன்றாவது ஆசை அனைத்தும் பெற முயலுகின்றான். ஆகையால், மனிதன் வயிற்றை (மண்ணறையின்) மண் அல்லாமல் வேறு எதனாலும் நிரப்ப முடியாது.* பேராசையை விட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், அது உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்து அவர்களின் பேராசை கஞ்சத்தனத்தை கற்றுக்கொடுத்தது. அவர்கள் கருமித்தனம் படைத்தவர்களானார்கள். அது அவர்களுக்கு இரக்கமில்லாத தன்மையைக் கற்றுக் கொடுத்தது. அவர்களைக் கொடியவர்களாக்கும் பாவங்களைச் செய்யவும் அது கற்பித்து, அவர்களை வழிகேட்டில் ஆக்கிவிட்டது.* பாவங்களைச் செய்வதற்கு காரணமாக இருப்பது பேராசையே.* பேராசையும் அல்லாஹ்வின் நேசமும் ஒரே நெஞ்சத்தில் ஒன்று சேர்வதில்லை.* செல்வந்தனாக வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள். அது உங்கள் நேர்மையை விட்டும் தூரமாக்கி விடும்.* மறுமை நாளை மறக்கச் செய்யும் உலகை விட்டும், மரணத்தை மறக்கச் செய்யும் வாழ்க்கையை விட்டும், நற்செயல்களின் சிறப்புகளை மறக்கச் செய்யும் பேராசைகளை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.இந்த அறிவுரைகளை மனதில் கொண்டு, பேராசைக் குணத்தை மாற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif