அஹ்மதாபாத்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க அரசு மாநிலத்தில் அரசியல் சட்டத்தை நெருக்கடிக்கு ஆளாக்குவதாக சுட்டிக்காட்டி முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தாவின் தலைமையிலான பிரமுகர்களின் குழு ஆளுநரை சந்தித்துள்ளது. இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என இக்குழு ஆளுநருக்கு அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் பா.ஜ.க தலைவரான மேத்தாவுடன் மூத்த வழக்கறிஞர் பல்வந்த்பாய் தேசாய், முன்னால் சோலிசிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா இர்பான் எஞ்சீனியர், சமூக ஆர்வலர் ரோஹித் பிரஜாபதி ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். தனது உத்தரவுக்கு கட்டுப்படாத உயர் அதிகாரிகளை மோடி மிரட்டுவதோடு அவர்கள் மீது குற்றத்தை சுமத்துவதாகவும் இக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
கொலைகளிலும், தாக்குதல்களிலும் குற்றவாளிகள் என கண்டறிவோரை சட்டத்தின் முன்னால் கொண்டுவராமல் அவர்கள் தப்புவதற்கு அனுமதிக்கப்படுகிறது. குஜராத் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்களை மோடிக்கு கசிய செய்த குஜராத் கூடுதல் அட்வக்கேட் ஜெனரல் துஷார் மேத்தா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு பிரமுகர்கள் குழு கூறியுள்ளது.நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக