இன்று காலை 10.20 மணி அளவில் டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாவது நுழைவாயில் அருகே குண்டு வெடித்தத்தில் 9 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர்நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி சீட்டு வழங்கப் படும் இடம் அருகே சூட்கேசில் வைக்கப் பட்டு இருந்த குண்டு வெடித்ததாக தெரிகிறது. தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
குண்டு வெடித்த இடத்தில் எங்கு பார்த்தாலும் ரத்தக் கறை படிந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மும்பையில் சமீபத்தில் மூன்று இடங்களில் நடத்தப் பட்ட குண்டு வெடிப்பில் இன்னும் துப்பு துலக்கப் படாத நிலையில் அடுத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக