- முத்துப்பேட்டை முகைதீன்
லோக்சபாவில் நேற்று சிதம்பரத்தின் அறிக்கைக்கு பிறகு அத்வானி பேசுகையில்," இப்போதுள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் மீது குறை சொல்ல விரும்பவில்லை. ஒன்று மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அந்த சம்பவத்திற்கு பின், அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கவில்லை. அந்தளவுக்கு அந்நாட்டு அரசு நடவடிக்கைகள் எடுத்தது. இங்கு நாமும் அதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
ஏங்க அத்வானி நம்ம நாட்டுலை கடுமையான நடவடிக்கை தேவைதாங்க. நீங்க சரியாதாங்க சொல்லிருக்கீங்க.
1992 டிசம்பர் 6 ல பாபரி மஸ்ஜித் என்று ஒன்ற இடித்த பொழுதே உண்மையான குற்றவாளிகள் அரசு மூலம் கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தால். இன்று உங்க வாயில் இருந்து இந்த வார்த்தை வருமா அத்வானி ஜி...?
இடிப்புக்குப்பிறகு மும்பையில் கலவரத்தை ஏற்படுத்தி 2000க்கு மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டித்திருந்தால் இன்று அத்வானி ஜி வாய் திறந்திருப்பாரா?
நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் தான் என்பது நிரூபனமான பின்பும் அதை தடை செய்து அதன் பயங்காரவாதிகளை கைது செய்திருந்தால் நீங்க இப்ப இதுபோல கூறுவீங்களா அத்வானி ஜி..?
மாலேகானில் குண்டு வைத்ததாக ஒரு பெண் சாமியார் உள்பட சிலரை இந்திய அரசு கைது செய்தது. ஆனால் இவர்களை என்ன செய்திருக்க வேண்டும் மாலேகான் மக்கள் மத்தியில் வைத்து சுட்டு கொண்றிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால். அத்வானி ஜி நீங்க இப்ப கூற வழியே இருந்திருக்காது.
குஜராத்தில் 3000 க்கு மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றுகுவித்த பொழுதும், அப்பவி முஸ்லிம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தபொழுதும் குற்றவாளிகளும், ஆட்சியில் இருந்த, இருந்து கொண்டிருக்கின்ற மோடியை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட்டிருந்தால் இப்ப அத்வானி ஜி வாய் திறந்திருக்க மாட்டர்.
இதெயெல்லாம் இந்திய அரசு முறையாக செய்திருந்தால் இன்று அத்வானி போல யாரும் வாய் திறக்கவே மாட்டாங்கள்ள. இந்த அத்வானியெல்லாம் நியாயத்தை பேசுறளவுக்கு இந்திய அரசு வழிவகுத்துவிட்டது. இனிமேலாவது இந்திய அரசு விழித்துக்கொண்டு உன்மையாக குற்றவாளிகளை தண்டிக்க முன் வருமா
வியாழன், 8 செப்டம்பர், 2011
இந்த வார்த்தை வருமா அத்வானி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக