வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ஏவுகணை மூலம் கொடூர விஷ தாக்குதல்; 640 போராளிகள் துடிதுடித்து பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் மீது சரீன் என்ற விஷ வாயுவை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரசாயன ஆயதங்களை ஐநா கண்கானிக்க சென்ற சில தினங்களில் இப்படி ஒரு போர் குற்ற மீறல் நடந்துள்ளது. இந்த கொடிய விஷ வாயு தாக்குதலில் குறைந்தது 640 போராளிகள் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது.
FILE


சிரியா தலைநகர் டமாஸ்கஸின் கிழக்கு பகுதியி நேற்று வான்வழியாக ஏவுகணை மூலம் கொடூர விஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. . இந்த இடத்திலிருந்து திரட்டப் பட்ட சோதனை மாதிரிகளில் இருந்து சரீன் விஷ வாயு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பஷார்-3'' எனும் ஏவுகணை மூலம் சரீன் வாயு கொண்டு குண்டு செலுத்தப்பட்டுள்ளது. இது இலக்கு நிர்ணயிக்க முடியாத ஏவுகணை வகையைச் சேர்ந்ததாகும். சிரிய ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 640 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif