வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

திண்டுக்கலில் மமக தலைவர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்! இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பெட்ரோல் வெடிகுண்டை வீசியுள்ளனர்.

E-mailPrintPDF
திண்டுக்கல் பாரதிபுரத்தில் வசிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் 34வது வார்டு தலைவர் செய்யது அபுதாகிர் அவர்களின் வீட்டின் மீது இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பெட்ரோல் வெடிகுண்டை வீசியுள்ளனர். நேற்று இரவு 11.40 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து அறிந்ததும் சென்னையில் இருந்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில அமைப்பு செயலாளர்கள் மண்டலம் ஜெயினுலாபுதீன், மைதீன் உலவி
ஆகியோர் திண்டுக்கல் விரைந்தனர்.
இன்று காலை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள், மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் செய்யது அபுதாகிர் வீட்டிற்கு வருகை தந்து நடந்ததை கேட்டறிந்தனர்.

அங்குள்ள பல்வேறு சமுதாய மக்களும் இந்த சம்பவத்தை கண்டித்து பொதுச்செயலாளரிடம் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

இதுபற்றி கருத்து கூறிய பொதுசெயலாளர் பொதுமக்கள் அமைத்து காக்க வேண்டுமென்றும், மதவெறி சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போதும் இதே கருத்தை வெளியிட்டார்.

உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இன்று மாலை தலைமை நிர்வாகிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்திக்க உள்ளனர்.

thanks to tmmk.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif