திங்கள், 2 செப்டம்பர், 2013

இந்தியாவெங்கும் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்:

பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிறது காவிக்குழு
அலெக்ஸ் பாண்டியன்
கடந்த ஒன்பதரை வருடங்களாக மத்திய ஆட்சியை இழந்த நிலையில், பாஜக தொடர்ந்து தேய்ந்து வருகிறது. பல மாநிலங்களில் கட்சி கலகலத்து விட்டது. அத்வானி குழுவிற்கும், நரேந்திர மோடி குழுவிற்கும் இடையில் 3 ஆண்டுகளாக நடந்துவரும் பனிப்போர் தொடர்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு நரேந்திர மோடிக்கு இருப்பதால், முழு மூச்சில் தீவிர இந்துத்துவ குழுக்கள் களமிறங்கியுள்ளன.

இவர்கள் பெரிதும் நம்பி உள்ளது ஊடகங் களைத் தான்! ஊடகங்களில் பணியாற்று பவர்களுக்கு நேரிடையாகவும் மறைமுகமாக வும் அன்பளிப்புகள் கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்விளை வாகவே பெரும்பாலான ஊடகங்கள் நரேந்திர மோடியை கதாநாயகனைப் போல சித்தரித்து அவருக்கான பிரச்சாரத்தையும் நடத்தி வருகின் றன. 

இதைத்தவிர அவர்கள் மிகவும் நம்பி யிருப்பது மதக்கலவரங்களைத் தான். அடுத்த ஆறு மாதங்களுக்குள் நாடெங்கிலும் குண்டு வெடிப்புகளும், வகுப்புக் கலவரங்களும் காவி பயங்கரவாதிகளால் நடத்தப்படக்கூடும் என்ற தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

வரும் பொதுத்தேர்தலில் பா.. ஆட்சியைப் பிடிக்காவிட்டால், கட்சி உள் முரண்பாடுகளால் இரண்டாக உடையும் அபாயம் இருப்பதால், இது இந்துத்துவாவினருக்கு வாழ்வா? சாவா? போராட்டமாக மாறியிருக்கிறது.
எனவே ‘272’ என்ற திட்டத்தை வகுத் துள்ளனர். அதாவது மத்திய ஆட்சியைப் பிடிக்க 272 தொகுதிகள் தேவை என்பதால் 272 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்வதுடன், மேலும் பல தொகுதிகளை கூடுதலாக பெறுவதும் அவர்களது திட்டமாகும். இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சி அமைப்பதே அவர்களது நோக்கமாகும். மதச்சார்பற்ற கட்சிகளின் நிர்பந்தங்களின்றி, தங்களது 88 வருட காவி கனவு திட்டங்களை சமரசமின்ற அமல்படுத்துவதுதான் அவர்களது ரகசிய திட்டமாகும்.

இதற்காக பாஜக கி, ஙி, சி என தொகுதிகளை வரையறுத்துள்ளதாகவும், உறுதியாக வெற்றி பெறும் தொகுதிகள் கி பட்டியலிலும், போராடி வெற்றிப் பெறக் கூடிய தொகுதிகள் ஙி பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகவும், தமிழகத்தில் கி பட்டியலில் கன்னியாகுமரி மற்றும் கோவை பாராளுமன்றத் தொகுதிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆட்சியைப் பிடிப்பதற்காக எத்தகைய மக்கள் விரோதச் செயல்களிலும், பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபட தீவிரவாத அமைப் பானஅபினவ் பாரத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற ஒரு தகவலும் பரவுவதால் அதிர்ச்சியலைகள் உருவாகியிருக்கின்றன.

பீஹாரில் நிதிஷ்குமார் பா...வின் உறவை துண்டித்த பிறகு இருபெரும் சம்பவங்கள் பீஹாரில் நடைபெற்றன. ஒன்று, புத்தகயா குண்டிவெடிப்பு! இன்னொன்று சத்துணவில் விஷம் கலக்கப்பட்டு குழந் தைகள் கொல்லப்பட்டது! இதுபற்றி நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுவது யாதெனில் இத்திட்டங்களின் லேபில்விணீபீமீ வீஸீ நிuழீணீக்ஷீணீt’ என்பதாகும். அதாவது குஜராத்தில் தயாரிக்கப்பட்ட சதித் திட்டங்கள் என அர்த்தமாகும்!

இதன்படி முஸ்லிம்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் வீண்பழி சுமத்தி அவரவர் செல்வாக்கு மிகுந்த இடங்களில் மதக்கலவரங்களை நடத்துவதாகும்! குறிப்பாக மீண்டும் ராமர் கோவில் விவகாரம் ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகளால் தீவிரமாக நடத்தப்பட உள்ளதாகவும், நாடெங்கிலும் மீண்டும் ராமபக்தர்கள் உசுப்பப்பட உள்ளதாகவும் வரும் தகவல்கள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற அரசியல் கட்சிகளையும் மிரள வைத்துள்ளதாம்!

இந்துக்களிடம் பீதியை உருவாக்கி, அதை அனுதாபமாக மாற்றுவது, கலவரங்களை நடத்தி சிறுபான்மையினரை வாக்களிக்க விடாமல் தடுப்பது, குஜராத்தில் அவர்களை முடக்கி இருப்பது போல் நாடு முழுக்க அச்சத்தில் முடக்குவது உள்ளிட்டவை இந்துத்துவாவின் தேர்தல் தொடர்பான ரகசிய செயல் திட்டங்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆங்காங்கே வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள் என பல இடங்களில்கோட்சேபாணியில் அபிநவ் பாரத்தின் குண்டுகள் வெடிக்குமோ என்ற பீதியும் உருவாகியுள்ளது. இவையாவும் முஸ்லிம்களின் வேடத்தில் உருவாக்கப்படும் நபர்களால் அமல்படுத்தப்படுமாம்! 

தனிப்பட்ட பிரச்சனைகளில் இந்துத்துவாவினர் தாக்கப்படுவதையும், பாதிக்கப்படுவதையும் திசைமாற்றி மதமோதல்களாக சித்தரிப்பதும் இனி அதிகமாக நடக்குமாம்!

தமிழகம் உட்பட நாடெங்கிலும் உள்ள சிறுபான்மையினத்தின் முக்கியத் தலைவர்களை கொல்வதும் அந்த ரகசிய செயல் திட்டங்களில் ஒன்றாகும் என்ற கூடுதல் தகவல்கள் நிலவரங்களைக் கூர்ந்து கவனிப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உளவு அமைப்புகளில் இந்துத்துவ காவி சிந்தனையோடு செயல்படும் சிலரின் துணையும், வழிகாட்டுதலும் இதற்கு உண்டு என்றும் நம்பப்படுகிறது.

இந்திய சொந்தங்களே... தமிழின உறவுகளே... என்ன செய்யப் போகிறோம்? பாசிசத்தைக் கண்டு மவுனம் காக்கப் போகிறோமா? அல்லது நாட்டைக் காக்க வேறுபாடுகளை மறந்து தெளிவான அரசியல் முடிவுகளை எடுக்கப் போகிறோமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேசத்தின் பாரம்பரியத்தையும், நல்லிணக்கத்தையும் கெடுக்கத் துடிக்கும் மதவாத சக்திகளை அனைவரையும் ஒருங்கிணைந்து எதிர்ப்பதன் மூலமாக மட்டுமே அவர்களின் எதிர்கால வன்முறைகளைத் தடுக்க முடியும்.

எதிர்வரும் இந்தியாவின் பொதுத்தேர்தலை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனிக்கும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது!

நன்றி
மக்கள் உரிமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif