புதன், 13 மே, 2015

நாதாரி தனம் பண்ணினாலும் நாசுக்கா!?


சத்தியமங்கலத்தில் பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலையிட்டு சிலையை உடைத்த வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் நான் இந்து முன்னணி தீவிர உறுப்பினர். அடுத்த மாதம் 4ம் தேதி சதுமுகையில் பெரியார் திராவிடர் கழகக் கூட்டம் நடப்பது எனக்கு தெரிய வந்தது. இதை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி ஒன்றிய இணை அமைப்பாளர் செல்வக்குமாரிடம் ஆலோசனை கேட்டேன். அவர் தான் பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு குழப்பத்தை ஏற்படுத்தினால் கூட்டத்துக்குத் தடைபோட்டு விடுவார்கள் எனக் கூறினார். அதனால் தான் அப்படி செய்தேன் என்று மஞ்சுநாதன் போலீசிடம் கூறினார்.
பிள்ளையாரை வைத்து அரசியல் செய்துகிட்டே அவருடைய சிலையை உடைத்து தமிழகத்தில் ஒரு மதகலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக ஆர் எஸ் எஸ் ஹிந்து முன்னணி டவுசர் பாண்டிகளின் சதி அம்பலம்.
இவர்களை ஹிந்து மதத்தின் காவலன் என்று நம்பும் அப்பாவி ஹிந்து சகோதரர்கள் சிந்திப்பார்களா?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif