திங்கள், 18 ஜூலை, 2011

புனித ரமலானின் புகழ் பருக வாருங்கள்.........


அஸ்லாமு அலைக்கும்

அல்லாஹ்வின் நல்லடியார்களே
புனித ரமலானின் புகழ் பருக வாருங்கள்..
.......

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள் மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாயப்பளிப்பதோடு ரமலானின 30 நாட்களும் அல்லாஹ்வின்
பொருத்தத்தை பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிகளின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை
ஏற்படுத்தி விடுகிறது,

நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூறுதல், தர்மம் செய்தல், சொல்-செயல்- எண்ணங்கள் அணைத்திலும் இறையச்சத்தை பேனுதல் என் நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடமே
ஏற்படுத்தி விடுகிறது.

ரமலானின் முழு பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப்புகழும் ரமலானை நமக்கு அருள்
புரிந்த அல்லாஹ்வுக்கே.

கடமையான ஜவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகள் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுதுக்
கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது
பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து,
பள்ளியில் குர்ஆன் ஓதிக்கொண்டு உபரியான தொழுகைகளை தொழுதுக் கொண்டும் கடமையான தொழுகையை எதிர்ப்பார்த்த
வர்களாக இருக்கும் நிலமையையும் காணலாம்.

இந்த பக்திப் பரவச நிலை புனித ரமலான் ஒரு மாதத்தில் மட்டு
மன்றி தினந்தோரும் இருப்பதுப் போல் அனைவரின் உள்ளத்திலும்
இவ்வுணர்வு குடிக்கொண்டு, அதன்மூலம் வெளிபடும் வணக்க
வழிப்பாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடு அமைந்து விட்டால்
இம்மை மறுமைக்கு நன்றனறோ எனும் ஆவலும் எண்ணமும்
நமக்கு ஏற்படுகின்றது இந்நிலையை நமது வாழ்க்கையில்
ரமலானில் மட்டடுமின்றி ரமலானுக்கு பின்னரும் தொடர்ந்து
கடைப்பிடுத்திட அல்லாஹ் அருள் புரிவானாக.

இந்த கண்ணிமிக்க மாதத்தின் 30 நாட்களை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக்
கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக
அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்கானும் ஹதீஸில்
காணமுடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமலானின் முதல் பத்து நாட்கள்
' ரஹ்மத்' எனும் அருட்கொடையாகவும் நடுப் பத்து நாட்கள்
'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக கூறியதாகவும் கடைசிப் பத்து
நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும்
உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண்
191 இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு
முதாலாவது பத்து நாட்களில், அதிகமாக அல்லாஹ்விடம் துஆ
செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள்
கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள் பார்வை, செவி,புலன் நுகர்தல் உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட்கொடை
களையும் நினைவு கூறவும் அவற்றிற்க்கு முறையாக நன்றி
செலுத்திடவும் அதந் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்,

இவை எல்லாவற்றிற்க்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால்
சிறப்பாக வழங்கப்பட்ட (ஈமான்) எனும் இறை நம்பிக்கை' என்ற
அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும்
காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது. ஏனெனில்
ஈமான் என்ற இனையற்ற அருட்கொடை இல்லாவிட்டால் நாம் பெற்றுள்ள இதர வளமும் உண்மையில் அருட்கொடை இல்லை
எனலாம்.

இறை நம்பிக்கை இல்லாத நிலையில் செல்வம் எனும் அருட்கொடை அதிகமானால் அவனை அது வழிக்கேட்டிற்கும்
தீமைகளுக்கும் இட்டு சென்று விடும் வாய்ப்பகள் உண்டு. கல்வி மற்றும் அறவு எனும் அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரிந்துணராமல் கேடாக அமைந்திட வழிவகுக்கும்
அபாயம் உண்டு. உடல் அழகு, வலிமை, திறமை, ஆற்றல்கள்,
அதிகாரம் போன்றவை ஈமான் எனும் இறைநம்பிக்கை இல்லாத
நிலையில் கிடைக்கப்பெற்றால் அவற்றை தவறான வழியில்
மனோ இச்சையின் படி ஈடுப் படுத்திட அதன் மூலம் தமக்கும்
தம்மை சுற்றியிள்ளோருக்கும் கேடும் இழப்பும் ஏட்படுத்திட வாய்ப்புகள் அதிகம்.( இறைநம்பிக்கை) மற்றும் இறையச்சம்
என்பதுதான் உண்மையில் அருட்கொடை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif