புதுடில்லி: சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. பாடப் புத்தகங்களை வழங்குவதற்கான கால அவகாசத்தை, ஆகஸ்ட் 2ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது. அப்பீல் மனு மீதான விசாரணை 26ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி விவகாரத்தில், சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் மனுத் தாக்கல் செய்தது. அதில், "தற்போதைய முறையை பின்பற்றினால், தேசிய அளவிலான தேர்வை எழுதும் போது, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையாக நமது மாணவர்களின் தகுதி இருக்காது. மாணவர்கள் படைப்பாற்றல் திறன் பெற வாய்ப்பில்லை. ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை, தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. அப்பீல் மனு நீதிபதிகள் பாஞ்சால், தீபக் வர்மா, சவுகான் அடங்கிய "பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் டில்லி மூத்த வழக்கறிஞர்கள் பி.பி.ராவ், முகுல் ரோத்தகி, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஏ.கே.கங்குலி, எம்.என்.கிருஷ்ணமணி ஆஜராகினர். "தி.மு.க., மற்றும் அதன் தலைவர்களின் புகழ்பாடும் விதத்தில் பாடப் புத்தகங்கள் உள்ளன. ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி.,யை புகழ்ந்தும், பாடப் புத்தகத்தில் குறிப்பு உள்ளது. பாடப் புத்தகங்கள் தரம் குறைந்து உள்ளது. அவசர கதியில் இவை தயாராகியுள்ளன' என மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடினார். அப்போது நீதிபதிகள், 200 கோடி ரூபாய் செலவு செய்து அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் என்ன ஆகும்? என கேள்வி எழுப்பினர். அதற்கு மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், "சமச்சீர் கல்வியை அரசு அமல்படுத்தும். பாடத்திட்டம், புத்தகங்களை மறுஆய்வு செய்து, அடுத்த ஆண்டில் அமல்படுத்துவோம். தேசிய பாடத்திட்ட அமைப்பின் கொள்கைக்கு உட்பட்டு பாடத் திட்டம் இல்லை. நல்ல தரமான கல்வியை வழங்க, சமச்சீர் பாடப் புத்தகத்தில் ஏராளமான திருத்தங்கள், மாற்றங்கள் செய்ய வேண்டியதுள்ளதால், இந்த கல்வியாண்டில் அதை பயன்படுத்த முடியாது' என்றார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து அமைக்கப்பட்ட குழுவும், சமச்சீர் பாடத் திட்டத்தில் குறைபாடுகள் உள்ளது என கூறியுள்ளது என மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் தெரிவித்தார். அதற்கு நீதிபதி பாஞ்சால், "குழுவின் கருத்துக்கள், தனித்தனி உறுப்பினர்களின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக இல்லை' என சுட்டிக் காட்டினார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கங்குலி, "நான்கு ஆண்டுகளாக நடந்த விரிவான ஆய்வுக்குப் பின், சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில்லை என ஒரே நாளில் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பாடப் புத்தகத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. 200 கோடி ரூபாய் செலவில் ஒன்பது கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு, வினியோகிக்க தயாராக உள்ளன. "இந்தப் புத்தகங்களை எரிக்கப் போகிறார்களா, கிட்டங்கியில் வைக்கப் போகிறார்களா, பொது மக்கள் பணத்தை வீணடிக்கப் போகிறார்களா, பாட புத்தகங்கள் இல்லாமல் இரண்டு மாதங்களாக மாணவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும், குழந்தைகள் மத்தியில் அரசு ஏன் அரசியல் செய்ய வேண்டும்?' என வாதாடினார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள் பாஞ்சால், தீபக் வர்மா, சவுகான் அடங்கிய, "பெஞ்ச்', சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. சமச்சீர் கல்விக்காக அச்சடிக்கப்பட்ட ஒன்பது கோடி பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகிக்கவும் உத்தரவிட்டது. புத்தகங்களை ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்க, அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. ஒரு கோடியே 23 லட்சம் மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், மாணவர்களின் நலன் கருதி, இவ்வழக்கை வரும் 26ம் தேதி விசாரித்து முடிவெடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நன்றி தினமலர்
சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து அமைக்கப்பட்ட குழுவும், சமச்சீர் பாடத் திட்டத்தில் குறைபாடுகள் உள்ளது என கூறியுள்ளது என மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் தெரிவித்தார். அதற்கு நீதிபதி பாஞ்சால், "குழுவின் கருத்துக்கள், தனித்தனி உறுப்பினர்களின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக இல்லை' என சுட்டிக் காட்டினார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கங்குலி, "நான்கு ஆண்டுகளாக நடந்த விரிவான ஆய்வுக்குப் பின், சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில்லை என ஒரே நாளில் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பாடப் புத்தகத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. 200 கோடி ரூபாய் செலவில் ஒன்பது கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு, வினியோகிக்க தயாராக உள்ளன. "இந்தப் புத்தகங்களை எரிக்கப் போகிறார்களா, கிட்டங்கியில் வைக்கப் போகிறார்களா, பொது மக்கள் பணத்தை வீணடிக்கப் போகிறார்களா, பாட புத்தகங்கள் இல்லாமல் இரண்டு மாதங்களாக மாணவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும், குழந்தைகள் மத்தியில் அரசு ஏன் அரசியல் செய்ய வேண்டும்?' என வாதாடினார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள் பாஞ்சால், தீபக் வர்மா, சவுகான் அடங்கிய, "பெஞ்ச்', சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. சமச்சீர் கல்விக்காக அச்சடிக்கப்பட்ட ஒன்பது கோடி பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகிக்கவும் உத்தரவிட்டது. புத்தகங்களை ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்க, அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. ஒரு கோடியே 23 லட்சம் மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், மாணவர்களின் நலன் கருதி, இவ்வழக்கை வரும் 26ம் தேதி விசாரித்து முடிவெடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நன்றி தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக