லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் ஒரு தலைசிறந்த பல்கலைகழங்கள் ஆக மாற்ற வேண்டும்...
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் ஒரு தலைசிறந்த பல்கலைகழங்கள் ஆக மாற்ற வேண்டும்...இன்ஷா அல்லாஹ்
சிந்திக்குமா நிர்வாகம்..?
ஒத்துழைப்பார்களா உலமாக்கள்..?
நமதூர் ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் இன்றைய நிலை என்ன..?
நூற்றாண்டு விழா கண்ட பாரம்பரியம்,ஊரே ஒன்றிணைந்து உருவாக்கிய கனவுக் கோட்டை,உலகம் முழுவதும் பரவிப்பணியாற்றும் ஆலிம்களை உருக்கித்தந்தது என ஏராளமான சிறப்பம்சங்களுடன்…இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சூழலில் எழுந்து நிற்கும் கட்டிடங்கள்…சுகாதாரம் மிக்க சூழலில் சுவனத்துக்குச் செல்ல சொல்லப்படும் அறபோதனைக் கூடங்கள்…சுகமான நினைவுகளை தாங்கி நிற்கும் தாருத் தஃப்ஸீர் கலைக்கூடம்…இவ்வளவு பெருமையும்நமது லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார்அரபிக்கல்லூரியைச் சார்ந்ததுதான்..
பட்டம் வாங்கி வீட்டு மாணவர்களாக வெளியில் வரும் தருனங்களில் வாய்ப்பு கிடைத்தவர்கள் வெளி நாடுகளில் இமாமாக பணிபுரிகிறார்கள் அதிகமான சதவிகிதம் மாணவர்களின் வாழ்கையில் வேலை வாய்ப்புகள் கேள்வி கூரியாக்கபடுகிறது .ஏதோ கிடைக்கின்ற வேலையை பார்த்துகொண்டு காலம் தள்ளுகின்றனர் இதன் கரணங்களால் மார்க்க வழி மட்டும் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது .மார்க்கம் மற்றும் உலக கல்வி சார்ந்த மதரசாக்களை உருவாக்கி அதை பல்கலைகழங்கள் ஆக மாற்ற வேண்டும் அப்போதுதான் கல்வியிலும் நம் சமூகம் உயர்ந்த நிலைக்கு மாறும் என்பதில் ஐயமில்லை.
அத்தோடு சிரிய மாற்றங்களுடன் கல்வித்தரத்தை உயர்த்துவது காலத்தின் கட்டாயம்.மாதந்தோறும் ”மத்ரஸா மீட்டிங்” என்று சொல்லப்படும் மாதாந்திரக்கூட்டங்கள் தரையில் அமர்ந்து பேசிய காலம் போய் இன்று நல்ல இருக்கைகளில் அமர்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் நிலைக்கு உயர்ந்துள்ள நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ள ஆலிம்கள், அவர்களது வாழ்வாதாரமும் சிறந்தோங்க ஒரு சிறந்த வழிக்குபாதை வகுக்க முன்வர வேண்டும்..
அது எப்படி முடியும்..? பழமை வாய்ந்த மதரஸாவல்லவா நமது ஜாமிஆ..?என்பன போன்றவைகளை உச்சரிக்க முற்படாமல்,முன்னேற்றத்திற்க்கு வழிகாணும் வகையில் அவர்களதுபுதிய ஆலோசனைகளை இணைத்து தேவைப்பட்டால் ஒட்டு மொத்த ஊரின் ஒத்துழைப்பையும் நாடி தமிழகத்தின் பல பகுதிகளில் உருவாகிக் கொண்டிருக்கும் மார்க்க கல்வியோடு வாழ்வியலுக்கு வழி வகுக்கும் உலக கல்வியையும் சேர்த்து,படிக்கும் ஆண்டுகளையும் குறைத்து,அரபியும் ஆங்கிலமும் இணைந்த அல்லது அரபியும் ஆங்கிலமும் தனித்தனியாக இருக்கும்படியான சான்றிதழ்களையும் வழங்கி,(காலப்போக்கில் இவைகள் அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழாகவும் மாற வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன) இக்கல்லூரியை உலகத்தரத்திற்க்கு இணையாக ஒப்பற்ற ஒரு கல்லூரியாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஊரில் உள்ள அறிஞர்கள்,கல்வியாளர்கள்,முற்போக்கு சிந்தனையுடையவர்கள்,இளைஞர்கள்என அனைத்து தரப்பினரும் இவைகளைஎல்லாம் கவனத்தில் கொண்டு செயலாற்றுவது காலத்தின் கட்டாயம்.
நன்றி லால்பேட்டை சகோதரர்களின் சங்கமம்

Top of Form
Bottom of Form
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக