டுபாக்கூர் மோடியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றும் "பெக்கு" மீடியா!
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பாசிச முகத்தின் கொடூரங்களை மக்களுக்கு பரப்புரை செய்யும் நோக்கில் சமூக ஆர்வலர்கள் ஒர் புதிய இணைய தளத்தினை நாட்டு மக்கள் உண்மைகளை அறிந்து கொளவதற்காக திறந்திருக்கிறார்கள்.
மனித உரிமை கழகமான பி.யு.சி.எல் என்ற அமைப்பு இந்த இணையதள பக்கத்தின் தலைமை நிர்வாக பொறுப்பை ஏற்றெடுத்து இருக்கிறது.
நாட்டில் சனநாயக சிந்தனைகள் அனைவரின் உள்ளத்திலும் மலர வேண்டும் என்கிற இலட்சிய நோக்கில் இந்த இணையதள பக்கத்தை திறந்திருப்பதாக ‘பி.யு.சி.எல்’ இன் துனை தலைவர் ராதா காந்த் சக்சேனா ஜெய்பூரில் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.டெல்லி உள்பட நாட்டில் 27 இடங்களில் நேற்றைய தினம் இணைய பக்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
“பெக்கூ” எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எதிராளி அல்ல என்று தெரிவிக்கும் ராதா காந்த் சக்சேனா,ஆனாலும் குஜராத் முதல்வர் மோடியின் பொய் பிரச்சாரங்களின் உண்மை நிலவரத்தை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவோம் என்றும் சக்சேனா தெரிவிக்கிறார்.
வெளிநாட்டு முதலீடுகள் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்தபோது கடந்த பத்து வருடங்களில் 60,000 சிறு தொழில் நிறுவனங்களுக்கு பூட்டு போடப்பட்டிருக்கிறது என்கிற அதிர்ச்சிகரமான தகவல்கள்www.pheku.in இணையதள பக்கதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
1995 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருகை தந்த பொது குஜராத்தின் பொது கடன் 10,000 கோடியாக இருந்தது.இது 2001-02
காலகட்டத்தில் 1,38,978 கோடியாக பல்கி பெருகி இருக்கிறது மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல்களும் அந்த இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2012 ஆண்டின் தொழில் வளர்ச்சி பட்டியலில் குஜராத் மாநிலம் நாட்டின் எட்டாம் இடத்தில் இடம் பிடித்திருக்கிறது என்றும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இது மோடி மறைத்து வைக்கும் யதார்த்த குஜராத்தின் பரிதாப நிலை என்று சக்சேனா தெரிவிக்கிறார்.
குஜராத் அரசு நலதிட்டங்களில் காட்டப்படும் பாரபட்சமான செயல்பாடுகள்,போலி என்கவுண்டர்கள், குஜராத்தின் வீழ்ச்சி,போன்ற பல விபரங்கள் இணையத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
--ஊடகங்கள் சரியான செய்திகளை தருகிறதா? பக்கத்திலிருந்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக