செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

உலகில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப் பட்டு பண நாயகம் ஆட்சி செய்ய துடிக்கிறது

அன்று:-

சில வருடங்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் அயோக்கிய நாட்டு சபைகளின் கோரிக்கைக்கு இணங்க அயோக்கிய நாட்டு சபையின் பார்வையில் அங்கு தேர்தல் நடத்தப் பட்டது.அங்கு நடந்த தேர்தலில் ஹமாஸ் என்ற இயக்கம் பெரும்பான்மை ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

ஆனால் அந்த வெற்றியை உலக பயங்கரவாதி அமெரிக்காவும்,அவனை ஆட்டிப் படைக்கும் உலக குழப்பவாதி இஸ்ரேலும் ஏற்க மறுத்தன.அதற்க்கு அவர்கள் முன் வைத்த காரணம் ஹமாஸ் தீவிரவாத யோக்கம் என்று.ஒரு அமைப்பு தீவிரவாத அமைப்பா?? இல்லை தங்களுக்கு தன நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் அமைப்பா என்று கூட தெரியாமலா?? அந்நாட்டு மக்கள் அந்த இயக்கத்துக்கு ஓட்டளித்து வெற்றிப் பெற வைத்த்தார்கள்??

இன்று :-

30 வருடங்களுக்கு மேலாக எகிப்தில் சர்வாதிகார ஆட்சி செய்து வந்த ஹோஸ்னி முபாரக்கை நீக்கி விட்டு அந்நாட்டு மக்கள் தேர்தல் நடத்தி இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்திற்கு ஓட்டளித்து பெரும்பான்மை வெற்றியை அளித்து அவர்களுக்கு ஆளும் உரிமையை தருகிறார்கள்.

இத ஏற்க மறுத்த உலக பயங்கரவாதியும்,குழப்பவாதியும் சேர்ந்து,சில ஆட்சி வெறிப்பிடித்த அரபு தலைவர்களுடன் கூடி பேசி அந்த ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிவெடுத்து அன் நாட்டு ராணுவத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்து தன சொந்த நாட்டு மக்களை கொன்று குவிக்க உத்தரவிடுகின்றன

அதற்க்கு அவர்கள் வைக்கும் காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தீவிரவாதிகளாம்?? அவர்கள் யார் என்று தெரியாமலா மக்கள் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள்??

உலகில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப் பட்டு பண நாயகம் ஆட்சி செய்ய துடிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif